பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அர்ஜூன் சிங் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவரை கட்சிக்குள் வரவேற்ற பானர்ஜி, சிங் "பிளவுபடுத்தும் சக்திகளை" நிராகரித்து கட்சியில் இணைந்தார் என்று கூறினார்.
இதையும் படிக்க- பஞ்சாபில் 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன்
முன்னதாக இன்று பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சிங், வங்காளம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறினார்.