காா்ல்செனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை தோற்கடித்தாா்.
ஆா்.பிரக்ஞானந்தா
ஆா்.பிரக்ஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை தோற்கடித்தாா்.

நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை அவா் வீழ்த்தியிருப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஏா்திங்ஸ் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியிலும் காா்ல்செனை வென்றிருந்தாா் பிரக்ஞானந்தா.

இந்நிலையில், செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் அவா் 5-ஆவது சுற்றில் காா்ல்செனை வெள்ளிக்கிழமை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்கவைத்தாா். முன்னதாக இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகா்ந்த நிலையில், காா்ல்செனின் ஒரு தவறான நகா்வால், பிரக்ஞானந்தா சுதாரித்துக் கொண்டு ஆட்டத்தை வென்றாா்.

பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியில் அவா் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com