ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆகியோரது ஆட்சியைக் காட்டிலும் மோசமானது பாஜக ஆட்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
"மத்தியில் ஆளும் அரசு மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை மீறுகிறது. ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பாஜக-வின் ஆட்சி மோசமானது" என்றார்.