கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டம்: உ.பி. சட்டப்பேரவையில் பரபரப்பு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் மாநில  அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :23 மே 2022, 6:12 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் மாநில  அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் கேசவ் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகிய இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா். அதைத் தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். 

Story image

இந்நிலையில், அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்குப் பிறகு 18 ஆவது உ.பி. சட்டப்பேரவை இன்று கூடியது. கூட்டத்தின் முதல் நாளான இன்றே சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சட்டப்பேரவையினுள்ளே அகிலேஷ் யாதவ் தலைமையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.