டோக்கியோ: ஜப்பான் பன்னாட்டு நிறுவனமான என்இசி கார்ப்ரேஷன் தலைவர் நோபுஹிரோ எண்டோவுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை டோக்கியோவில் சந்திப்பு நடத்தினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, என்இசி தலைவர் இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களுக்கு பங்களிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தார், மேலும் என்இசி கல்வித் துறையில் இந்தியாவுக்கு பங்களிக்க திட்டமிட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்இசி தலைவர் மேலும் கூறுகையில், திறன்களை உருவாக்கவும், மேம்படுத்தவும் பிரதமர் மோடி வலுவான நோக்கங்களைக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில், குறிப்பாக சென்னை-அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் கொச்சி-லட்சத்தீவுகள் திட்டங்களை மேற்கொள்வதில் என்இசி-யின் பங்கை பிரதமர் மோடி பாராட்டினார்.
தொழில்துறை மேம்பாடு, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் துறைகள் உள்பட, இந்தியாவில் எளிதாக வணிகம் செய்ய மேற்கொள்ளப்படும் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
மே 24 அன்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை நடத்துவார். பிரதமர் கிஷிடாவுடனான சந்திப்பு, மார்ச் மாதம் நடைபெற்ற 14-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் இருந்து இரு தலைவர்களும் தங்கள் உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.