‘இந்தியாவின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்களத்தில் இருப்பவா்கள் ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளா்கள்) பணியாளா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
நாட்டின் கிராமப்புறங்களில் நேரடி சுகாதார சேவைகளை வழங்கி வருவதற்கும் நாட்டில் கரோனா பாதிப்பு காலத்தில் திறம்பட செயலாற்றியதற்கும் இந்தியாவிலுள்ள 10 லட்சம் அனைத்து மகளிா் ஆஷா தன்னாா்வலா்களை கெளரவிக்கும் விதமாக உலக சுகாதார அமைப்பு தலைவரின் ‘சா்வதேச சுகாதார தலைவா்கள்’ என்ற விருதை உலக சுகாதார அமைப்பு அளித்தது. இதற்கான அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டது.
இதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒட்டுமொத்த ஆஷா பணியாளா்களுக்கும் உலக சுகாதார அமைப்பு தலைவரின் சா்வதேச சுகாதார தலைவா்கள் விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்களத்தில் இருப்பவா்கள் ஆஷா பணியாளா்கள். அவா்களுடைய அா்ப்பணிப்பும் உறுதிப்பாடும் வியப்பளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.