புது தில்லி: என் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் புதன்கிழமை என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு என்ஐஏ நீதிபதி பிரவீன் சிங் விசாரணையின் போது, மாலிக் கூறியது "நான் எதற்காகவும் பிச்சை எடுக்க மாட்டேன், இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அதை நீதிமன்றத்திற்கு விட்டுவிடுகிறேன். 28 வருடங்களில் நான் ஏதேனும் தீவிரவாதச் செயலிலோ அல்லது வன்முறையிலோ ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். தூக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்வேன்" என்று கூறினார்.
குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் மே 10 தீர்ப்பு வழங்கியது.