மேற்கு வங்காள கல்வி நிறுவனத்துக்கு ஸ்கோச் விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றுவதில் பங்களிக்கும் நிறுவனங்கள், மக்களை கௌரவிக்கும் விதமாக ஸ்கோச் விருது 2003லிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
“மேற்கு வங்காளத்தின் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து ஸ்கோச் விருதினை பெற்றுள்ளது. இந்த சாதனையைப் படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.