ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் தீவிரவாத கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 
Security guard of PDP leader shot at in Srinagar
Security guard of PDP leader shot at in Srinagar

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் தீவிரவாத கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஆத்தூரா பாலா பாலத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஒரு நபரின் நடமாட்டம் இருந்ததாக காவல் அதிகாரி கூறினார். போலீசாரை கண்டதும் அவர் தப்பிக்க முயன்றார். 

பின்னர், காவல்துறையினர் சாதுரியமாக அவரைப் பிடித்தனர். அவர் தீவிரவாத கூட்டாளி ஷ்ரக்வாரா க்ரீரியில் வசிக்கும் முகமது சலீம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர், அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, ஐந்து பிஸ்டல் ரவுண்டுகள் உள்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. 

முதற்கட்ட விசாரணையில், க்ரீரி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அவர் வைத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com