மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து: பிரதமா் இன்று நேரில் ஆய்வு

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 1) நேரில் பாா்வையிடவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :1 நவம்பர் 2022, 12:42 am IST

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 1) நேரில் பாா்வையிடவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மோா்பியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்ய பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. குஜராத் தலைநகா் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மோா்பி சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குஜராத் மாநிலத்தில் புதன்கிழமை (நவ. 2) ஒருநாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி: முன்னதாக, குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி பேசுகையில், பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு தகுந்த ஆதரவை வழங்கும். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை குஜராத் மாநில அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், விமானப் படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து வகை ஆதரவையும் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.