நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பந்தர்பூர் விட்டல் கோயிலில் மகா பூஜை செய்தார் ஃபட்னாவீஸ்!

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு பந்தர்பூரில் உள்ள புகழ்பெற்ற விட்டல் கோயிலில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவரது மனைவி அம்ருதாவுடன் மகா பூஜை செய்தார்.

News image

Maha deputy CM Fadnavis performs 'mahapuja' at Vitthal temple in Pandharpur

Updated On :4 நவம்பர் 2022, 4:57 pm IST

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் உள்ள புகழ்பெற்ற விட்டல் கோயிலில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவரது மனைவி அம்ருதாவுடன் மகா பூஜை செய்தார்.

இந்தாண்டு கார்த்திகை ஏகாதசியை வார்காரி தம்பதிகளான உத்தம்ராவ்-கலாவதி சலுங்கே ஆகியோர் பட்னாவீஸ், அவரது மனைவியுடன் வழிபாடு செய்யும் வாய்ப்பைப் பெற்றனர். 

வழிபாட்டுக்குப் பிறகு பட்னாவீஸ் கூறுகையில், 

முதல்வராக இருந்தபோது ஆஷாதி ஏகாதசியின் போது மகாபூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கார்த்திகை ஏகாதசியான இன்று பிரார்த்தனை செய்ய மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனது அதிர்ஷ்டம் என்றார். 

மேலும் வார்காரி பிரிவினரின் பங்களிப்பைப் பாராட்டினார். பல படையெடுப்புகள் இருந்தபோதிலும், வார்க்காரிகள் பகவத் தர்மத்தின் கொடியை உயர்வாக வைத்திருந்தனர். 

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆஷாதி ஏகாதசிக்காக பந்தர்பூருக்கு வந்திருந்தபோது, ​​நாட்டின் பிற மதத் தலங்களில் உள்ள பல்வேறு வழித்தடங்களின் வளர்ச்சியின் வழியில் கோயில் நகரத்தை மேம்படுத்துவது குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். 

மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கோயிலுக்கு நல்ல வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். வரும் நாள்களில், மாநில அரசு அதைச் செயல்படுத்தும் என்றார் பட்னாவீஸ். 

இதுதொடர்பாக யாரையும் வற்புறுத்தாமல், நிலம் கையகப்படுத்தும் பட்சத்தில் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி பணிகளைத் தொடங்குவோம் என்று அவர் உறுதியளித்தார். 

மேலும் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் வாரி மரபுக்கு இடையூறு ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.