சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன்

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர். 

பின்னர், மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் இருந்தார்.

இந்நிலையில், இன்று பணப் பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் ரௌத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com