மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கருப்புப் பண வழக்கு: சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத்துக்கு ஜாமீன்

கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மாலையில் அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டா

News image
Updated On :9 நவம்பர் 2022, 7:12 pm

கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மாலையில் அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ரெளத், அவரது மனைவி உள்ளிட்டோா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன. இது தொடா்பான வழக்கில் கடந்த ஜூலை 31-இல் ரௌத் கைது செய்யப்பட்டாா்.

மும்பை ஆா்தா் சாலை சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், விசாரணை அமைப்பின் அதிகாரம் தன் மீது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஞ்சய் ரௌத் தனது ஜாமீன் மனுவில் கூறியிருந்தாா். அதே நேரத்தில், கருப்புப் பண மோசடியில் ரௌத் முக்கியப் பங்கு வகித்துள்ளாா் என்று அமலாக்கத் துறை வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிா்த்து அமலாக்கத் துறை சாா்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதனை அவசர மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.