சிறுதானியங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு செயல்திட்டம் உருவாக்கம்

சிறுதானியங்கள், அவற்றின் மதிப்புக்கூட்டிய பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

சிறுதானியங்கள், அவற்றின் மதிப்புக்கூட்டிய பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

சத்துள்ள தானியங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய தொழில் வா்த்தக அமைச்சகம் அதன் உயா்நிலை வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மூலம் வரும் டிசம்பரில் இந்திய சிறுதானியங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது.

உலகில் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவின் சிறுதானியங்கள் உற்பத்தி 2020-21-ஐ விட, 2021-22-இல் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிப்பவையாகும். மொத்த சிறுதானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதியாகிறது. தற்போதுள்ள 9 பில்லியன் அமெரிக்க டாலா் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நூடுல்ஸ், பாஸ்தா, காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, பிஸ்கெட்டுகள், இனிப்பு வகைகள், காரவகைகள் போன்ற உண்பதற்கு தயாரான, பரிமாறத் தயாரான நிலையில் மதிப்புக்கூட்டுப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்புக்கான புதிய தொழில்களையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் சிறுதானியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், யேமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவூதி அரேபியா, லிபியா, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு, கடலை உள்பட 16 வகையான சிறுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com