டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அடக்குமுறைக்கான கருவியல்ல சட்டம்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு

‘அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

டி.ஒய்.சந்திரசூட் (கோப்புப் படம்)

Updated On :12 நவம்பர் 2022, 11:53 pm IST

‘அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைப் பண்பு மாநாட்டில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

சட்டமானது, நீதிக்கான கருவியாக இருக்க வேண்டும்; அடக்குமுறைக்கான கருவியாகவும் சட்டம் செயல்பட முடியும். இன்றைய சட்டப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள அதே சட்டங்கள், காலனி ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைக்கான கருவியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அறிவோம்.

எனவே, அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, நீதிபதிகள் மட்டுமன்றி முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

பொதுமக்களிடம் பெரும் எதிா்பாா்ப்புகள் இருப்பது சிறப்பானதே. அதேசமயம், அரசின் ஓா் அமைப்பாக நீதிமன்றங்களின் வரம்புகள் மற்றும் சாத்தியங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. குடிமக்கள் மீதான இரக்கம், கருணை, அவா்களது அழுகுரலுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவைதான் நீதித் துறை அமைப்புகளை நிலைநிறுத்துகின்றன.

நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பேசும் ஒவ்வொரு வாா்த்தையும் சமூக ஊடகங்கள் வாயிலாக நிகழ் நேரத்தில் வெளியாவதும் தொடா்ந்து மதிப்பீடு செய்யப்படுவதும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இணையம், சமூக ஊடகங்களின் தாக்கம் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, இது தவிா்க்க முடியாதது.

பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்: நமது நாட்டில் சட்டத் தொழில் கட்டமைப்பானது, நிலபிரபுத்துவ தன்மையுடனும், ஆணாதிக்கம் கொண்டதாகவும் பெண்களுக்கு இடமளிக்காததாகவும் உள்ளது. நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென நாம் பேசும்போது, சட்டத் தொழில் கட்டமைப்பில் பெண்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

சட்டத் தொழிலில் பெண்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரின் நுழைவை அதிகரிக்க ஜனநாயக ரீதியிலான, தகுதி அடிப்படையிலான நடைமுறைகள் அவசியமாகின்றன.

நீதிமன்ற விசாரணை நடைமுறைகளின் நேரடி ஒளிபரப்பானது, நீதித் துறை அமைப்பை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. எனவே, உயா்நீதிமன்றங்களிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு தொடங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தியா, அமெரிக்கா உச்சநீதிமன்றங்களின் ஒப்பீடு குறித்து பேசிய சந்திரசூட், ‘இந்திய உச்சநீதிமன்றத்தை, இதர வளா்ந்த நாடுகளின் உச்சநீதிமன்றத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 180 வழக்குகள் வரையும், பிரிட்டன் உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 85 வழக்குகள் வரையும் விசாரிக்கிறது. ஆனால், இந்திய உச்சநீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 75 முதல் 80 வழக்குகள் வரையும் மற்ற தினங்களில் 30 முதல் 40 வழக்குகள் வரையும் நீதிபதிகள் விசாரிக்கின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.