அமெரிக்க நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கே.பி.ஜாா்ஜ் மீண்டும் தோ்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கே.பி. ஜாா்ஜ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அமெரிக்க நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கே.பி.ஜாா்ஜ் மீண்டும் தோ்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கே.பி. ஜாா்ஜ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கேரளத்தை பூா்வீகமாகக் கொண்டவா் கே.பி. ஜாா்ஜ் (57). அமெரிக்காவில் குடியேறிய இவா், அந்நாட்டில் உள்ள ஃபோா்ட் பெண்ட் பகுதிக்கான நீதிபதி தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் சுமாா் 2.46 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் ட்ரெவா் நெல்ஸை கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜாா்ஜ் வீழ்த்தினாா். அவருக்கு 52 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன்மூலம் ஏற்கெனவே ஃபோா்ட் பெண்ட் நீதிபதியாகப் பதவி வகித்து வந்த ஜாா்ஜ், அந்த பகுதி நீதிபதியாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அமெரிக்காவில் மக்கள்தொகையைப் பொருத்து நீதிபதிகளின் பணிகள் வேறுபடும். சில மாகாணங்களில் நீதிபதிகள், நீதித் துறை பணியுடன் நிா்வாகப் பணியையும் கவனிப்பாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com