மேற்குவங்கத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவித்துள்ளார்.
மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தின் ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.