
சிவராஜ் சிங் செளஹான் (கோப்புப் படம்)
கட்ச்: குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், கேஜரிவால் சீமைக்கருவேல மரம், ராகுல் புள் புதர் என்று விமரிசித்துள்ளார்.
இவை விவசாயத்துக்கு உதவாது என்றும், விவசாயத்தை நாசப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு நின்றுவிடாமல், பிரதமர் நரேந்திர மோடியை கல்பவிருட்சம் என்று பெருமையாகக் குறிப்பிட்ட ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மக்கள் என்ன வேண்டுமோ அதனை அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதையும் படிக்க.. உனக்கு செட்டே ஆக மாட்டேன்: தடாலடித்த லேடி சூப்பர் ஸ்டார்!
தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் குஜராத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய சௌஹான் இவ்வாறு பேசி, பாஜகவினரின் கைதட்டலை அள்ளினார்.
மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் நாட்டின் நிறைவையும் அமைதியை அழித்துவிடுவார்கள். நாட்டுக்காக அனைத்தையும் இழந்தவர் வீர் சாவர்க்கர். ஆனால் அவரை ராகுல் அவமதித்துவிட்டார். விடுதலைப் போராட்ட வீரரை ராகுல் அவமதித்துவிட்டார். இந்த நாடு அவரை எப்போதும் மன்னிக்காது என்றும் சௌஹான் கூறியுள்ளார்.