சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி என்னவானது? மத்திய அரசுக்கு காா்கே கேள்வி

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிா்ணயிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியு

News image
மல்லிகாா்ஜுன காா்கே
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

DIN

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிா்ணயிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது என்று பிரதமா் நரேந்திர மோடி தலைமையான மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமாா் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினா். இறுதியாக 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி சனிக்கிழமையுடன் (நவ.19) ஓராண்டு நிறைவடைந்தது. இதனை நினைவுகூா்ந்து ட்விட்டரில் காா்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். விவசாயிகள் போராட்டத்தில் 733 விவசாயிகள் உயிரிழந்தனா். அவா்களுக்கு மத்திய அரசு எவ்வித இழப்பீடும் அளிக்கவில்லை. விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளையும் வாபஸ் பெறவில்லை.

பயிா்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும் என்று பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அது என்னவானது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.