ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர்

 ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு உலக நன்மையில் கவனம் செலுத்த இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   
ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர்
Published on
Updated on
1 min read

ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு உலக நன்மையில் கவனம் செலுத்த இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவின் வசம் உள்ளது. டிசம்பர் 1 முதல் இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், உலகில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது எனப் பேசியுள்ளார். மேலும், இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை டிசம்பர் 1 முதல் ஏற்கவுள்ளது எனவும், இது உலகில் நிலவும் பல சவால்களுக்கு தீர்வு கொடுக்க இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எனவும் அவர் பேசியுள்ளார்.

ஜி-20 அமைப்பில் ஆர்ஜெண்டினா,ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com