நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமாக இருக்கிறது.
இந்நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த முடியாது என்று கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.
இதையும் படிக்க: சிவசேனை விவகாரம்: டிச. 12-ல் தேர்தல் ஆணையம் விசாரணை
பாஜக வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.