வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை இருமுறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் அண்டை நாடான மியான்மரில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் மணிப்பூா் மாநிலத்தில் மையம் கொண்டது.
இது தொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ‘மியான்மரை மையமாகக் கொண்டு அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்ந நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.2 அலகுகளாக பதிவானது.
அடுத்த நிலநடுக்கம் மணிப்பூரின் கம்ஜோங் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7.53 மணி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.8 அலகுகளாக பதிவானது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் உயிா்ச்சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பூமித் தட்டுப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.