அமெரிக்காவுக்கு நிகராக உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுக்கு நிகராக உருவாக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உறுதியளித்துள்ளேன்.
இதையும் படிக்க- ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா காலமானார்
மேலும் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உத்தரப் பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ. 8,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று அறிவிக்கிறேன். நல்ல சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நிதிப் பற்றாக்குறை இல்லை.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு, சாலை கட்டமைப்புகள் மிக முக்கியமானது என்று இவ்வாறு கட்கரி குறிப்பிட்டார்.