உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஃபேஸ்புக் ஃபாலோவர்ஸ் குறைகிறதா? குவியும் புகார்கள்; நிர்வாகம் பதில்

முகநூலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கு பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:03 pm IST


 
முகநூலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கு பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

எந்த காரணத்திற்காக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் முகநூல் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் பல பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக முகநூலில் தனிப்பட்ட பயனர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

பயனாளர்கள் மட்டும் இந்த பிரச்னையை சந்திக்கவில்லை. முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கும் பின்தொடர்பாளர்கள் எண்ணிகை கணிமாக குறைந்துள்ளது. இதுவரை 119 மில்லியன் பின்தொடர்பாளர்கள் குறைந்துள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முகநூல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.