ரூபாய் நோட்டுகளில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு கடிதம் எழுதிய கேஜரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் உருவங்களைச் சேர்க்க அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு கடிதம் எழுதிய கேஜரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் உருவங்களைச் சேர்க்க அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, கடவுளின் ஆசீர்வாதத்துடன் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலையில் கொண்டுவருவதற்கு நிறைய முயற்சிகள் தேவை. 

ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறம் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் படங்களும் இருக்க வேண்டும் என்பது 130 கோடி இந்தியர்களின் விருப்பம் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

ஒருபுறம் அனைத்து நாட்டு மக்களும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம், தெய்வங்களின் ஆசீர்வாதமும் தேவைப்படுகிறது. இதனால் எங்கள் முயற்சிகள் பலனளிக்கின்றன. 

சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுள்களின் ஆசீர்வாதத்தின் சங்கமம் இருந்தால் மட்டுமே நாடு முன்னேறும். 

கேஜரிவாலின் இந்த கோரிக்கை பாஜக மத்தியில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com