தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனது ஸகீராபாத் தொகுதிக்கு உள்பட்ட தெலங்கானா மாநிலம் காமரெட்டி பகுதிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு திடீரென காங்கிரஸ் கட்சியினர் வந்து அமைச்சரின் காரை வழிமறித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அங்கிருந்த பாஜகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் வந்து அவர்களை கலைத்து அமைச்சர் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தினர்.
அமைச்சரின் காரை காங்கிரஸார் வழிமறித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு