கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு மாநகரம்

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பெங்களூரு மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு மாநகரம்

பெங்களூரு: பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பெங்களூரு மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

நகரின் பல இடங்களில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை காரணமாக பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com