சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மோடி பெற்ற பரிசுப் பொருள்கள் வரும் 17 முதல் ஏலம்: ஏலத்தில் இடம் பெறும் விலை உயர்ந்த பொருள்கள் எவை?  

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் வழங்கிய 1,000-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்களுக்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்குவதாக தெர

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 11:20 am IST

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் வழங்கிய 1,000-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்களுக்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் ஆகியவற்றை அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. 

அந்த வகையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், 4 ஆவது முறையாக pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 17 ஆம் தேதி ஏலம் தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடம் பெறுகின்றன.  இம்முறை விளையாட்டு மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களின் விலை உயர்ந்த பரிசுகளும் ஏலத்தில் இடம் பெறுகின்றன. 

1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும்.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுகளின் சிறப்புக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பரிசுகளாகப் பெறப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட பொருள்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்துவது ஒரு மரியாதை, இது இப்போது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பரிசுப் பொருட்களும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. மேலும், இந்த வரலாற்று சிறப்புமிக்க பரிசுப் பொருள்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து வாங்கிச் செல்லலாம்.

ஏலத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பரிசளித்த ராணி கமலாபதி சிலை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரிய ஓவியம், மற்றும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பரிசளித்த திரிசூலம் ஆகியவை அடங்கும்.

ஏலம் விடப்படவுள்ள பொருள்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பரிசளித்தது கோல்ஹாபூரில் அமைந்துள்ள மகாலட்சுமி தேவியின் சிலை மற்றும் ஆந்திரம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பரிசளித்த வெங்கடேசப் பெருமானின் படம் ஆகியவை அடங்கும். 

மேலும், பிரதமர் மோடி திறந்துவைத்த இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு முன்மாதிரி சிலையும் ஆரம்ப விலையாக ரூ.5 லட்சத்தில் ஏலம் விடப்படும்.

ஜனவரி 2019 இல் பிரதமர் அலுவலகத்தால் முதல் ஆன்லைன் ஏலம் தொடங்கப்பட்டது. கடந்த காலத்தைப் போலவே, ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி, மத்திய அரசின் முக்கிய திட்டத்திற்கும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.