தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10 வரை தசரா விடுமுறை அறிவித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மங்களூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை ஒட்டி தசரா விடுமுறையை அறிவிக்க வேண்டும் என மங்களூரு தெற்கு தொகுதி எம்எல்ஏ வேதவியாச காமத் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், உடுப்பி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் 2022-23 கல்விக் நாள்காட்டியின்படி விடுமுறை அளிக்கப்படும் என்றார்.