மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: புதிதாக 34 மருந்துகள் சேர்ப்பு

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 10:30 am

DIN

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியல் 1996-ம் ஆண்டு முதல்முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. தற்போது 4வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பழைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டு, புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு 27 சிகிச்சைப் பிரிவுகளுக்கென மொத்தம் 384 மருந்துகள் கொண்ட பட்டியலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

“அனைத்து தரப்பினருக்கும் குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கிய பங்காற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகைசெய்கிறது.

செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவிண் பவார், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.