சைபர்கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மிக மிக அவசியமின்றி பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
மிக நவீன கருவிகள் மூலம், சார்ஜ் போடப்படும் செல்லிடப்பேசிகளிலிருந்து தகவல்களை திருடும் அபாயம் இருப்பதாகக் கூறி ஒடிசா காவல்துறை இந்த அறிவுறுத்தலை செய்திருக்கிறது.
அதாவது, மொபைல் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் யுஎஸ்பி பவர் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையங்கள் மூலம், செல்லிடப்பேசி தகவல்கள் திருடப்படவும், செல்லிடப்பேசிகளில முறைகேட்டுக்குப் பயன்படும் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.