தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
முந்தைய தினமான வியாழக்கிழமை 10,631 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 123 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,02,268-ஆக உயா்ந்துள்ளது; 26,497 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 1.16 சதவீதமாக பதிவானது.