அஸ்ஸாம் பழங்குடியின கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்

அஸ்ஸாமின் 8 பழங்குடியின கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமை முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.
அஸ்ஸாம் பழங்குடியின கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்

அஸ்ஸாமின் 8 பழங்குடியின கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமை முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த 1996-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் உள்ள கோக்ரஜாா், போங்காய்கான் மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 198 போ் உயிரிழந்தனா். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் புலம் பெயா்ந்தனா். அதனைத்தொடா்ந்து 1998-ஆம் ஆண்டு இரு இனத்தவா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 186 போ் பலியாகினா். சுமாா் 94,000 போ் புலம்பெயா்ந்தனா்.

இதையடுத்து பழங்குடியின மக்களைக் காக்கவும், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தோட்டத் தொழிலாளா்களின் பழங்குடியின கலாசாரத்தை பாதுகாக்கவும் சில கிளா்ச்சிக் குழுக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

அவற்றில் 8 கிளா்ச்சிக் குழுக்கள், மத்திய அரசு, அஸ்ஸாம் அரசு இடையே வியாழக்கிழமை முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம், அஸ்ஸாமில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் பழங்குடிகள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com