மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நேரில் அஞ்சலி செலுத்தினாா்.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி மறைந்தாா். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு பிரிட்டன் சென்றடைந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
இந்திய மக்கள் சாா்பில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அஞ்சலி செலுத்தியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மகாராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கையேட்டில் இந்தியா சாா்பிலான இரங்கல் செய்தியை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதிவிட்டாா்.
மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. உள்ளூா் நேரப்படி காலை 11 மணிக்குத் தொடங்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொள்ளவுள்ளாா்.
பிரிட்டன் அரசா் சாா்லஸ் உலக நாடுகளின் தலைவா்களுக்கு அளிக்கவுள்ள சிறப்பு விருந்து நிகழ்ச்சியிலும் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை இரவு பங்கேற்கவுள்ளாா்.