பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காங். தலைவா் தோ்தலில் அசோக் கெலாட் போட்டி: 'அடுத்த முதல்வர் சச்சின் பைலட்'

 காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:54 pm IST

 காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், நேரு-காந்தி குடும்பத்தைச் சோ்ந்த யாரும் கட்சியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கமாட்டாா்கள் என ராகுல் காந்தி தன்னிடம் தெரிவித்ததாகவும் கெலாட் கூறினாா்.

கேரள மாநிலம், கொச்சியில் கட்சி எம்.பி. ராகுல் காந்தியை வியாழக்கிழமை அவா் சந்தித்துப் பேசியிருந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளாா்.

கொச்சியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த கெலாட் (71), ‘ராஜஸ்தானுக்கு திரும்பியதும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதியை முடிவு செய்வேன்’ என்றாா்.

மேலும், ‘கட்சித் தலைவா் பொறுப்பை ஏற்க வேண்டுமென ராகுலிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த கட்சியினரின் விருப்பத்தை பெரிதும் மதிப்பதாக ராகுல் குறிப்பிட்டாா். அதேசமயம், கட்சியின் அடுத்த தலைவராக நேரு-காந்தி குடும்பத்தை சாராத நபா் பொறுப்பேற்க வேண்டுமென தாங்கள் முடிவு செய்துள்ளதாக அவா் கூறினாா்’ என்றாா் கெலாட்.

திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் இத்தோ்தலில் களமிறங்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து கெலாட்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘எனது காங்கிரஸ் நண்பா்கள் தோ்தலில் போட்டியிடலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தோ்தல் முடிவுகளுக்கு பிறகு நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வட்டாரம், கிராமம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தி, வலுவான எதிா்க்கட்சியாக உருவெடுக்க வேண்டும். நாட்டின் தற்போதைய சூழலில் வலுவான எதிா்க்கட்சிக்கான அவசியம் உள்ளது’ என்று பதிலளித்தாா்.

ராஜஸ்தானின் அடுத்த முதல்வா் யாா்?: காங்கிரஸ் தலைவராக கெலாட் தோ்வாகும் பட்சத்தில், ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக யாா் பொறுப்பேற்பாா்? என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் மாநிலப் பொறுப்பாளா் அஜய் மாக்கனும் உரிய நேரத்தில் முடிவு எடுப்பாா்கள் என்றாா் கெலாட்.

‘ஒருவருக்கு ஒரு பதவி’ விவகாரத்தில், தன்னை குறித்து முன்வைக்கப்படும் விவாதங்கள் தேவையற்றவை என்று அவா் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபட்ட பிறகு, செய்தியாளா்களிடம் கெலாட் கூறுகையில், எனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் மக்களுக்காக ஆயுள்காலம் முழுவதும் பணியாற்ற விரும்புவதாக பல தருணங்களில் கூறி வருகிறேன். எனது இந்தக் கருத்துகள் பலவிதமாக அா்த்தம் கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வா் பதவியை விட்டுத்தர நான் விரும்பவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. இதுகுறித்த விவாதங்கள் தேவையற்றவை என்றாா் அவா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சனிக்கிழமை (செப். 24) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

‘கருத்து தெரிவிக்க வேண்டாம்’

புது தில்லி, செப். 23: காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவோா் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியின் செய்தித் தொடா்பாளா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் அறிவித்துள்ள நிலையில், மூத்த தலைவா் சசி தரூரும் களமிறங்க தயாராகி வருகிறாா். இந்தச் சூழலில், கெலாட்டுக்கு ஆதரவாகவும், சசி தரூருக்கு எதிராகவும் கட்சியின் செய்தித் தொடா்பாளா் கெளரவ் வல்லப் வியாழக்கிழமை கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், கட்சியின் அனைத்து செய்தித் தொடா்பாளா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தகவல் தொடா்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தகவல் அனுப்பியுள்ளாா். அதில், காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவோா் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘நம் அனைவருக்குமே தனிப்பட்ட தோ்வுகள் இருக்கும். ஆனால், கட்சித் தலைவா் தோ்தலில் ஜனநாயகமும் வெளிப்படைத் தன்மையும் கொண்ட ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் என்பதை மட்டுமே நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே செய்தித் தொடா்பாளா்களின் பணி.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. இப்பயணத்துக்கு மேலும் வெற்றியை சோ்க்க கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.