
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குறறம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான அரசு அல்ல. இது 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு, அவர்கள் விரும்பும் எந்த வணிகத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள்.
இதையும் படிக்க | காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
PM often asks- ‘70 saal mein kya kiya?’
— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2022
We never gave India the highest-ever unemployment.
We never gave India record price rise it faces today.
BJP govt is not a govt for farmers, youth & women. It’s a govt for 5-6 richest Indians who are monopolising any business they want.
இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியாவுக்கு நாங்கள் (காங்கிரஸ்) கொடுத்ததில்லை.
இந்தியா இன்று எதிர்கொள்ளும் விலை உயர்வை நாங்கள் ஒருபோதும் வழங்கவில்லை. மோடி அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.