தில்லியில் கெலாட்

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் புதன்கிழமை இரவு தில்லி வந்தடைந்தாா்.
முதல்வா் அசோக் கெலாட் (கோப்புப்படம்)
முதல்வா் அசோக் கெலாட் (கோப்புப்படம்)

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் புதன்கிழமை இரவு தில்லி வந்தடைந்தாா்.

ஜெய்ப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி வந்த அவா், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை வியாழக்கிழமை சந்திப்பாா் எனக் கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அசோக் கெலாட், கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்னைகள் காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கு முன்னதாக தீா்க்கப்பட்டுவிடும் என்றாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவாரா என்பது சோனியா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னா் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com