உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணைத் தலைவராக அனில்குமார் தேர்வு! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஏ.கே.அனில்குமார் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின்(ஐஏஎஃப்) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Published On :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஏ.கே.அனில்குமார் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின்(ஐஏஎஃப்) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அனில் குமார் தற்போது இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ஐஎஸ்டிஆர்ஏசி) இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

1951இல் நிறுவப்பட்ட சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, 72 நாடுகளில் 433 உறுப்பினர்களுடன் உலகின் முன்னணி விண்வெளி ஆலோசனை அமைப்பாகும். 

ஐஏஎப் அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளி அறிவியலின் வளர்ச்சியைத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. விண்வெளி தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களைப் பரப்புவதை ஆதரிக்கிறது என்று தேசிய விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 

சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் இஸ்ரோவின் விண்வெளி முயற்சிகளுக்கான அங்கீகாரம் என்று பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்ரோ ஒரு சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.