வங்கிளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
வட்டி விகிதம் 0.5% உயர்ந்ததையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9சதசீதம் ஆனது. இதன்மூலம் வட்டி விகிதத்தை 4ஆவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ விகிதம் 1.4% உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவனைத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- சோழ தேசத்தில் பொன்னியின் செல்வன்: நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி
கரோனா மற்றும் உக்ரைன் போரால் உலகப் பொருளதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.