ஜம்மு-காஷ்மீரில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 
ஜம்மு-காஷ்மீரில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் படிதர் கிராமத்தைச் சேர்ந்த மொஹமத் ஷபீர் அஞ்சும் என அடையாளம் காணப்பட்டார். 

குனயான் பகுதியில் சிஆர்பிஎப், சிறப்புக் குழு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தார். செய்தனர். 

பாதுகாப்புப் பணியாளர்களால் கவனிக்கப்பட்ட அஞ்சும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் அவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். 

ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அஞ்சும் பூஞ்சில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com