தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம்: மம்தா பானர்ஜி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.

News image
Updated On :17 டிசம்பர் 2023, 2:10 pm

DIN

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் ஒரு தீவிரமான விஷயம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளில், பூஜ்ய நேரத்தின் போது, பொது கேலரியிலிருந்து மக்களவை அறைக்குள் குதித்த இருவர், டப்பாக்களில் இருந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றி கோஷங்களை எழுப்பினர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஒரு தீவிரமான விஷயம் என்றும், அது ஒரு மிக பெரிய தவறு. இதை மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். அவர்கள் அதை விசாரிக்கட்டும் என்று தில்லி புறப்படுவதற்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் காரணமாக கட்சியின் மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன் மற்றும் மக்களவையைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள அமர்வில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.