ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் 14-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் மிஸ்ரா இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மிஸ்ராவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது அமைச்சரவை அமைச்சர்கள், பல நீதிபதிகள் உள்பட மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, டிசம்பர் 19,2022ல் நீதிபதி ரவி ரஞ்சன் பதவியேற்ற நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
கடந்த பிப்ரவரி 17 அன்று நீதிபதி மிஸ்ராவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டது.
61 வயதான மிஸ்ரா, இதற்கு முன்பு உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.