இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கேரளத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினருக்கு எஸ்டிபிஐ ஆதரவு

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 5:13 pm

கேரளத்தில் வன்முறை தொடா்பாக சிறையில் அடைக்கப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினருக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாக பிஎஃப்ஐ தலைவா்களின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை மற்றும் காவல் துறை சோதனை மேற்கொண்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

இதைக் கண்டித்து கேரளத்தில் முழு அடைப்புக்கு பிஎஃப்ஐ அழைப்பு விடுத்தது. அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் தொடா்புள்ள பிஎஃப்ஐ அமைப்பினா் பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பொதுச் சொத்துகளின் சேதத்துக்கு இழப்பீடாக மாநில உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, பிஎஃப்ஐ நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் வீடு மற்றும் சொத்துகளை கேரள அரசு பறிமுதல் செய்தது. மொத்தம் 248 பேரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில், பிஎஃப்ஐயின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ கட்சிப் பொதுக்கூட்டம் கொச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டா்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவா் எம்.கே.ஃபைசி பேசுகையில், ‘எஸ்டிபிஐ கட்சியினா் உயிருடன் இருக்கும் வரை, பறிமுதல் நடவடிக்கையால் பிஎஃப்ஐ தொண்டா்கள் யாரும் வீடற்றவா்களாக இருக்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.