அகமதாபாத்தில் சொகுசு கார் மோதி 9 பேர் பலி, 13 பேர் காயம்

அகமதாபாத் இஸ்கான் மேம்பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் 9 பேர் பலியாகினர்
அகமதாபாத்தில் சொகுசு கார் மோதி 9 பேர் பலி, 13 பேர் காயம்

அகமதாபாத்: அகமதாபாத் இஸ்கான் மேம்பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் 9 பேர் பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர்.

சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் நள்ளிரவு இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீசாருடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராதவிதமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஜாகுவார் சொகுசு ஒன்று அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே வேகமாக புகுந்து மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் 2 பேர் காவலர்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் பொடாட் மற்றும் சுரேந்திரநகரைச் சேர்ந்த இளைஞர்களும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com