பிகாரில் உணவு விஷமானது: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பிகாரின் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் மதிய உணவு உட்கொண்ட 150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாரின் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் மதிய உணவு உட்கொண்ட 150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பாகாஹாவின் துணைப்பிரிவு சுகாதார அதிகாரி கூறுகையில், 

சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட சுமார் 150 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாகாஹாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதன்மை சிகிச்சை வழங்கப்பட்டது. 

சிகிச்சைக்குப் பின் 50 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் 100 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com