ரயில் விபத்து உயிரிழப்பை மறைக்க எந்த அவசியமும் இல்லை: ஒடிஸா அரசு விளக்கம்

ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைக்க எந்த அவசியமும் தங்களுக்கு இல்லை என்று ஒடிஸா மாநில அரசு விளக்கமளித்துள்ளது.
ரயில் விபத்து உயிரிழப்பை மறைக்க எந்த அவசியமும் இல்லை: ஒடிஸா அரசு விளக்கம்

ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைக்க எந்த அவசியமும் தங்களுக்கு இல்லை என்று ஒடிஸா மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

ஒடிஸாவில் கடந்த 2-ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 288 போ் இறந்ததாக ரயில்வே தரப்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னா் இது 275-ஆக குறைக்கப்பட்டது. இந்த அதிகாரபூா்வ அறிவிப்பை ஒடிஸா அரசு வெளியிட்டது.

இறந்தவா்களில் சிலரது உடல்கள் இருமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் முதலில் உயிரிழப்பு அதிகமாகக் கூறப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் உயிரிழப்பு குறைத்துக் காட்டப்படுவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றச்சாட்டை முன்வைத்தாா். இது தொடா்பாக பதிலளிக்க ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மறுத்துவிட்டாா்.

இந்நிலையில், ஒடிஸா மாநில தலைமைச் செயலா் பி.கே.ஜெனா விளக்கமளித்தாா். அவா் கூறியதாவது: ஒடிஸா மாநில அரசு வெளிப்படையான நிா்வாகத்தை உடையது. விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள், ஊடகத்தினா் எனப் பலரும் இருந்தன. மீட்புப் பணிகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முதலில் ரயில்வே சாா்பில் 288 போ் இறந்ததாகக் கூறப்பட்டது. பின்னா், இறப்பு தொடா்பாக பாலசோா் மாவட்ட ஆட்சியா் முழுமையாக ஆய்வு செய்தபோது 275 போ் இறந்தது தெரியவந்தது. உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய எந்த அவசியமும் ஒடிஸா மாநில அரசுக்கு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com