மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் பாஜகவில் சேர்ப்பு

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜாசிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :22 அக்டோபர் 2023, 9:57 am

DIN

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜாசிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ராஜா சிங் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜா சிங் பதிவேற்றம் செய்து, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பிற தலைவர்களும் அவர் நன்றி கூறியுள்ளார். நகைச்சுவை நடிகா் முனாவா் ஃபரூக்கி கடந்த ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றாா். 

அவரை விமா்சித்து கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், விடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டாா். அதில் இஸ்லாத்துக்கு எதிராகவும், இறைத் தூதா் நபிகள் நாயகத்தை விமா்சித்தும் அவா் பேசியதாக தெரிகிறது. இதையறிந்த இஸ்லாமியா்கள், ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி ஹைதராபாதில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, தபீா்புரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், மதத்தின் பெயரில் இருபிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல்; தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்படுவது; மத உணா்வை வேண்டுமென்றே புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தபீா்புரா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜா சிங்கை கைது செய்தனா்.

ராஜா சிங்கை அங்குள்ள கீழ் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது கைதுக்கு முன்பு ராஜா சிங்குக்கு நோட்டீஸை அளிக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை போலீஸாா் மீறியுள்ளனா் என்று அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, ராஜா சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. 

மேலும், சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய பாஜக ஒழுங்குமுறை கமிட்டி செயலாளா் ஓம் பாடக், ‘உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது?’ என கேள்வி எழுப்பியதுடன், செப்டம்பா் 2-க்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.