குஜராத் மாநிலத்தில் தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் மக்கள், காவல்துறை, மாவட்டத்தின் உயா்அரசு அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனா்.
மாநிலத்தின் பாமான்போா்-கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மோா்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவாடி செயல்பட்டு வருகிறது.
இந்தச் சாலையை ஒட்டி செயல்பட்டு வந்த ஓயிட் ஹவுஸ் டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில், அதன் உரிமையாளா்கள் சாலையை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக சுங்கச் சாவடி அமைத்து கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தனா்.
அங்கீகரிக்கப்பட்ட வகாசியா சுங்கச் சாவடியைவிட சட்டவிரோத சுங்கச்சாவடியில் கட்டணம் பாதியாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தனியாா் சாலையைப் பயன்படுத்தி, குறைந்த கட்டணத்தை செலுத்தி வந்துள்ளன. இந்த முறையில் சுமாா் ஒன்றரை ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கு கட்டண வசூல் நடைபெற்றுள்ளது.
இது குறித்த தகவல் வெளியான நிலையில், காவல்துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, நிறுனத்தின் உரிமையாளா்கள் அமா்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹா்விஜய் சிங் ஜாலா உள்ளிட்ட 5 போ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடா்பாக மோா்பி மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘வகாசியா சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. காவல்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கும் முன்னோட்ட திட்டத்துக்கு உடன்பாடு

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

பைக் மீது பேருந்து மோதல்: நடத்துநா் உயிரிழப்பு
சரக்கு வாகனத்தில் மணல் கடத்தல்: 3 போ் மீது வழக்கு- ஒருவா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



