ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதான நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 2:40 pm IST

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், டிச.31 அன்று இரவு 9 மணிக்கு மேல் ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயில் வழியாகப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

இருந்தபோதும் நிலையத்துக்குள் நுழைய விரும்புபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் இயக்குநர் அனுஜ் தயாள் வெளியிட்டுல்ள அறிவிப்பில் காவலர்களின் அறிவுறுத்தலின்பேரில் ராjiiவ் செளக் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெளியேற இரவு 9 மணிக்கு மேல் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே இந்த முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

டிச.31 அன்று புறப்படும் கடைசி ரயில் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.

அதற்கேற்றாற்போல் பயணிகள் தங்கள் திட்டத்தை முடிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்ற ரயில்களின் அட்டவணையில் மாற்றமில்லை. 

இந்த மெட்ரோ நிலையத்துக்கு அருகில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கூடுவது வழக்கம்.

தில்லி காவல்துறை, கனாட் பிளேஸ் பகுதியை நோக்கி செல்லும் வாகனங்கள் 8 மணிக்கு மேல் முறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2500 காவலர்கள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தவும் 250 குழுக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பரிசோதனை மேற்கொள்ளவும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.