மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அஷ்வினி வைஷ்னவ், உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரச்செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் உலக வளர்ச்சியின் எஞ்சினாக இந்தியா மாறவுள்ளது.
ரயில்வே துறைக்கு ரூ. 2,14,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் சாதனை அறிவிப்பு. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.